அறிந்தும் அறியாமலும்’, ‘பட்டியல்’, ‘பில்லா’ மற்றும் ‘ஆரம்பம்’ போன்ற படங்களை இயக்கிய விஷ்ணு வர்தன் ‘ஷெர்ஷா’ படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். அடுத்து சல்மான் கானை வைத்து படம் ஒன்றையும் இயக்க இருக்கிறார்.
தொடர்ந்து, தற்போது அவர், மறைந்த நடிகர் முரளியின் மகனும், அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் முரளியை வைத்து ரொமான்டிக் என்டர்டெய்னர் ஜானரில் படம் ஒன்றை இயக்கி வருகிறார். சரத் குமார், பிரபு, குஷ்பு சுந்தர், கல்கி கோச்லின், ஷிவ் பண்டிட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை ‘மாஸ்டர்’ படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். நாயகியாக அதிதி ஷங்கர் நடித்துவருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயினில் உள்ள பல்வேறு நகரங்களில் நடைபெற்றது. இந்தியாவில் பெங்களூரு மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடந்தது.
A journey of love challenged by destiny.
We’re honoured to collaborate with National Award Winning Director @vishnu_dir on XB Creators' Production #2 titled #Nesippaya
Coming soon@_akashmurali @AditiShankarofl @realsarathkumar #PrabhuGanesan @khushsundar @kalkikanmani pic.twitter.com/wEl53YFL0w
— XB Film Creators (@XBFilmCreators) June 25, 2024
காதல் கதையாக உருவாகும் இப்படத்துக்கு ‘நேசிப்பாயா’ என தலைப்பிடப்பட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கேமரூன் பிரைசன் ஒளிப்பதிவு செய்கிறார் மற்றும் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.