மணிரத்தினம் இயக்கத்தில் கமல், திரிஷா, அபிராமி சிம்பு என பல நட்சத்திரங்களின் நடிப்பில் வெளியான படம் தான் தக்லைப்.
AR ரகுமான் இசையமைப்பில் பிரம்மாண்டமாக கடந்த 5ஆம் தேதி வெளியானது.
படம் வெளியான உடனேயே நெகட்டிவ் விமர்சனங்கள் கொடிகட்டி பறந்தன. இதனால் படக்குழு முதல் நாளே அப்செட்டானது.
படம் பார்த்த ரசிகர்களும் எதுக்கு இந்த படத்தை எடுத்தார்கள் என கடுமைன விமர்சனங்களையும் முன் வைத்தனர். படத்தில் பாடல் ஒன்றுதான் ஆறுதலாக இருந்தது என்றும் கலவையான விமர்சனங்கள் வந்தன.
அதே சமயம் படம் வெளியான 5 நாட்களில் வெறும் 40 கோடி ரூபாய் தான் வசூல் செய்துள்ளதாம். ரூ.180 கோடியில் தயாரான இந்த படம் படுதோல்வியை சந்தித்துள்ளது மணிரத்னத்துக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தக் லைஃப் படத்தின் கதையை கேட்டதும், இந்த படத்தை எடுக்க வேண்டாம் என இயக்குநர் மணிரத்னத்திடம் அவரது மனைவி சுஹாசினி கூறினாராம்.
ஆனால் இந்த கதை கமல்ஹாசன் உடையது. அவர் சொன்ன ஒன் லைன் கதையை வைத்து இயக்கியுள்ளேன். நிச்சயம் கமல் மீது நம்பிக்கை உள்ளது என கூறினாராம்.
தமிழ் ஆடியன்ஸ்க்கு இந்த படம் செட்டாகாது என சுஹாசினி கூறிய போதும், கமல் கொடுத்த தைரியத்தால் மட்டுமே இந்த படத்தை எடுத்ததாக பரவி வரும் தகவல் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.