‘இரண்டு வானம்’ திரைப்படத்திலிருந்து வெளியாகியுள்ள ‘வெள்ளிச்சுடரே’ பாடல், இனிமையும் உணர்ச்சியும் கலந்த இசையால் ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறது. விஷ்ணு விஷால், மமிதா பைஜு நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்திருக்க, மத்ராரேஷியின் வரிகளும் கபில் கபிலனின் மென்மையான குரலும் பாடலுக்கு கூடுதல் அழகை சேர்த்துள்ளன. வெளியான சில நாள்களிலேயே இந்தப் பாடல், இசை ரசிகர்களின் ப்ளேலிஸ்டில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.
மிதமான கிதார் இசையுடன் தொடங்கும் இந்தப் பாடல், படிப்படியாக உணர்ச்சி உச்சத்தை எட்டும் வகையில் அமைந்துள்ளது. இசை, வரிகள் மற்றும் குரல் ஆகியவை ஒன்றோடொன்று நயமாக இணைந்து, கேட்பவருக்கு தனித்துவமான அனுபவத்தை அளிக்கின்றன. இடைக்காட்சிகளில் சேர்க்கப்பட்டுள்ள நாட்டுப்புற இசைத் தாக்கங்கள், பாடலின் உணர்வை மேலும் செழுமைப்படுத்துகின்றன.
‘முண்டாசுப்பட்டி’, ‘ராட்சசன்’ போன்ற வெற்றிப்படங்களுக்கு பிறகு இயக்குநர் ராம் குமார் மற்றும் நடிகர் விஷ்ணு விஷால் இணையும் மூன்றாவது படம் ‘இரண்டு வானம்’ என்பதால், ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படம், அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் உருவாகி வருகிறது.
ஒளிப்பதிவை தினேஷ் கே பாபு கவனிக்க, படத்தொகுப்பை சான் லோகேஷ் மேற்கொள்கிறார். டிஜி தியாகராஜன் வழங்கும் இப்படத்தை செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்கின்றனர். ‘வெள்ளிச்சுடரே’ பாடலின் வெற்றி, படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ள நிலையில், ஆடியோ, டிரெய்லர் மற்றும் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.