கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தமிழில் மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் அறிமுகமான சமந்தா, அடுத்தடுத்து பல ஹிட் படங்களில் நடித்து தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
ஆனால் சமீப காலமாக சமந்தாவுக்கு மிகவும் சோதனை காலகட்டம் என்று சொல்ல வேண்டும். திருமணம் முறிவுக்கு பிறகு அவர் நடித்த படங்கள் எதுவும் பெரிதாக பேசப்படவில்லை. இந்தியில் சிடாடல் என்ற வெப் சீரிஸில் நடித்தார். ஆனால் அதுவும் பெரிதாக ஹிட் ஆகவில்லை. சமீபகாலமாக பெரிய ஹீரோக்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பும் சமந்தாவை தேடி வருவதில்லை.
இந்த நிலையில் செம கம்பேக் கொடுக்கும் விதமாக சமந்தா அடுத்ததாக ஒரு மிகப்பெரிய தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது புஷ்பா புகழ் சுகுமார் இயக்கத்தில் ராம்சரண் தேஜா நடிக்கும் ஒரு புதிய தெலுங்கு படத்தில் சமந்தா தான் கதாநாயகி எனக் கூறப்படுகிறது. இதற்கு முன்பே இவர்கள் மூவரும் இணைந்து ரங்கஸ்தலம் என்ற மெகா ஹிட் படத்தை கொடுத்துள்ளனர். அதனால் இந்த கூட்டணி மீண்டும் இணைவது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.