இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சி இன்று ஏஎம் ஜெயின் கல்லூரி மைதானத்தில் நடைபெறவிருந்த இருந்த நிலையில்அது தற்போது ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விஜய் ஆண்டனி தனது எக்ஸ் பக்கத்தில் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “வணக்கம் நண்பர்களே,
சில எதிர்பாராத காரணங்களாலும், தற்போது சென்னையில் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும் அரசு அதிகாரிகள் வழங்கிய ஆலோசனையின் அடிப்படையில், இன்று நடைபெறவிருந்த விஜய் ஆன்டனி 3.0 இசை நிகழ்ச்சி வேறு ஒரு தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.
இதனால் உங்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு மிகவும் வருத்தப்படுகிறேன். புதிய நிகழ்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும். உங்கள் புரிதலுக்கு நன்றி. புதிய நிகழ்வு பிரம்மாண்டமாக இருக்கும்” என்று நடிகர் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.