கே ஜி எஃப் 3 (KGF 3) யில் நடிகர் அஜித்

அஜித் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி பாலிசியை வைத்து பயணித்து வருகிறார். துணிவு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லைக்கா நிறுவனத்திற்கு ஒரு படத்தில் நடிக்க அஜித் ஒப்பந்தமானார். இயக்குனர் விக்னேஷ் சிவன் அந்தப் படத்தை இயக்குவதாக இருந்தது.

பின்னர் சில காரணங்களால் அந்தப் படம் டிராப் ஆனது. அதன்பின் தடையறத் தாக்க படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில்

விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டார். இந்தப் படம் போக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்திலும் அஜித் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பும் 30% முடிந்துவிட்டது. மேலும் இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது அஜித் அடுத்ததாக நடிக்கும் படம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அதாவது அஜித் அடுத்ததாக கேஜிஎஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் இரண்டு படங்களில் நடிக்கிறாராம். இதில் முதல் படம் முற்றிலும் புதிய கதை அம்சத்தோடு உருவாகும் படம் எனவும், இரண்டாவது படம் கேஜிஎஃப் யூனிவர்ஸோடு இணையும் படம் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் கிளைமாக்ஸில் அஜித், யாஷ் இடையிலான காட்சிகள் இடம்பெறும் எனவும் இது கேஜிஎஃப் 3-ம் பாகத்துக்கு லீட் கொடுக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கேஜிஎஃப் 2-ம் பாகத்தில் ராக்கி பாய் இறந்துவிட்டதால் மூன்றாம் பாகம் ப்ரீக்குவலாக இருக்கலாம் என்றும் அஜித் – பிரசாந்த் நீல் இணையும் இரண்டாவது படத்தில் இதுகுறித்த பல தகவல்கள் இடம்பெறும் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் கேஜிஎஃப் யூனிவர்ஸில் அஜித் தான் பெரிய டான் என்றும் அவரை வீழ்த்த ராக்கி பாய் எப்படி திட்டம் தீட்டுகிறார் என்பதுதான் கேஜிஎஃப் 3-ம் பாகமாக இருக்கும் என்றும் தகவல் கசிந்துள்ளது.

இதற்காக தல அஜித்திடம் 3 வருட கால்ஷீட்டை பிரசாந்த் நீல் கேட்டிருப்பதாகவும் 2025-ல் முதல் படத்திற்கான படப்பிடிப்பு துவங்கி 2026-ல் அந்த படம் வெளிவரும் எனவும் சொல்லப்படுகிறது. அதற்குள் அஜித் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களையும் பிரசாந்த் நீல் சலார் 2 படத்தையும் முடித்து இந்த படத்துக்கு தயாராகி விடுவார்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது.