தாமதமாக வந்த யோகி பாபு..! கடுப்பான பத்திரிக்கையாளர்கள்..!

இயக்குனர் சிம்புதேவன் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தவர்.

அந்த படத்த்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பின்னர் அறை எண் 305-ல் கடவுள், புலி, ஒரு கண்ணியும் 3 களவாணிகளும் ஆகிய படங்களை இயக்கினார். இதையடுத்து வெற்றிக்கூட்டணியான இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்துக்காக வடிவேலுவுடன் இணைந்தார். ஆனால் அந்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதில் தொடர்ந்து நடிக்க மறுத்தார். அதனால் அந்த படம் கைவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்போது யோகி பாபுவை வைத்து போட் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் ஆகஸ்ட்ர் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையடுத்து படத்தின் ப்ரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு கட்டமாக நேற்று படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்குப் படத்தின் கதாநாயகன் யோகி பாபு 3 மணிநேரம் தாமதமாக வந்தார்.

அதனால் கடுப்பான பத்திரிக்கையாளர்கள் யோகி பாபுவிடம் கோபமாக இதுபற்றி கேள்வி எழுப்பினர். அவர்களிடம் “நாந்தான் வந்தவுடனே அதற்காக மன்னிப்புக் கேட்டேனே. அதனால் நிதானமாக பேசுங்கள். நான் நடித்து வந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து பர்மிஷன் போட்டு வந்திருக்கேன். டிராபிக்கில் மாட்டிக்கொண்டேன்” என கடுகடுப்புடன் பதிலளித்துள்ளனர்.