ஜான் ஈ மன்’ (jan.e.man) திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சிதம்பரம்.
அப்படம், வெற்றிப் படமானதுடன் கதை ரீதியாகவும் கவனிக்கப்பட்டது.
தொடர்ந்து, சிதம்பரம் இயக்கத்தில் வெளியான ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ திரைப்படம் தென்னிந்தியளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
தமிழிலேயே இப்படம், ரூ.60 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாகக் கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக உலகளவில் ரூ. 225 கோடி வசூலித்து மலையாள சினிமாவின் அதிகம் வசூலித்த திரைப்படம் என்கிற சாதனையை அடைந்தது.
இப்படத்திற்காக, நடிகர் கமல்ஹாசன் மஞ்சுமெல் பாய்ஸ் படக்குழுவினரை நேரில் அழைத்து வாழ்த்தினார். இயக்குநர் சிதம்பரம் அடுத்ததாக ஃபாண்டாம் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் ஹிந்தி படத்தை இயக்க உள்ளார்.
இந்த நிலையில், மஞ்ஞுமல் பாய்ஸ் படத்தில் இடம்பெற்ற குணா குகை காட்சிகள் பலரையும் ஆச்சரியப்படுத்தியது. அதில், கலை இயக்குநரின் பணி முக்கியமாகக் கருதப்பட்டது. மேலும், விஎஃப்எக்ஸ் குழுவினரின் பணிகளும் தத்ரூபமாக இருந்தன. தற்போது, விஎஃப்எக்ஸ் காட்சிகள் உருவாக்க விடியோவை படக்குழு பகிர்ந்துள்ளது.