மலையாளத்தில் பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமாகி தெலுங்கு, தமிழ் என தென்னகத்தின் தேவதையாக வலம் வந்த சாய் பல்லவி இன்று இந்தியாவே கொண்டாடும் நடிகையாக உருவெடுத்திருக்கிறார்.
ஆரம்பத்தில் மாடலிங் செய்த சாய் பல்லவியை ஒரு விளம்பரத்தில் பார்த்த இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தன்னுடைய பிரேமம் படத்தின் மூலம் அவரை ஹீரோயினாக அறிமுகம் செய்தார்.
விஜய், அஜித் என எத்தனையோ முன்னணி ஹீரோக்கள் கேட்டும் அவர்களுடைய படங்களில் சரியான கேரக்டர்கள் கிடைக்காததால் அந்த வாய்ப்புகளை நிராகரித்துள்ளார். அதேபோல் ஒரு அழகு சாதனப் பொருள் தொடர்பான விளம்பரத்தில் நடிக்க கோடிக்கணக்கில் சம்பளம் கொடுக்க முன்வந்த போதிலும் அந்த வாய்ப்பை நிராகரித்தார்.
தற்சமயம் தென்னக மொழிகளில் அசத்தி வரும் சாய்பல்லவி பாலிவுட்டில் ராமாயணம் படத்தில் சீதையாக நடித்து அறிமுகம் ஆக இருக்கிறார். இந்த திரைப்படம் குறித்து அண்மையில் பேசிய அவர், “மகாபாரதத்தில் வரும் கதாபாத்திரங்களில் அர்ஜுனனின் மகன் அபிமன்யுவை தான் எனக்கு மிகவும் பிடிக்கும். கடந்த 10 ஆண்டுகளாக அவரைப் பற்றி படித்து அவரை காதலித்து வருகிறேன்” என கூறியுள்ளார். சாய் பல்லவியின் இந்த பேச்சு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.