கடனுக்காக நடிக்க வந்தவன் நான்: வைரலாகும் அஜித்தின் பழைய இன்டர்வியூ!

பத்ம பூஷண் விருது பெற்ற நடிகர் அஜித் குமார், இந்தியா டுடேயின் பேட்டியில், தான் எப்படி ‘திடீர் நடிகர்’ ஆனார் என்பதைப் பகிர்ந்துள்ளார்.
அவருடைய பயணத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டதையும் கூறியுள்ளார்.
அவருடைய பயணத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டதையும் கூறியுள்ளார்.

எனக்காக செலவு பண்ண முடியாதுன்னு சொன்னாங்க

பேட்டியில், “நடிப்பு என்னுடைய பிளானிலேயே இல்லை. நான் திடீர் நடிகர். ஸ்கூல் படித்து முடித்த பிறகு, ஆட்டோ உற்பத்தி நிறுவனத்தில் சுமார் ஆறு மாதங்கள் வேலை செய்தேன். 18 வயதில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் இறங்கினேன். என் அப்பா, இது மிகவும் செலவான விளையாட்டு, எங்களால் உனக்கு சப்போர்ட் செய்ய முடியாது, எனவே, உன் செலவுக்கு நீயே வழி கண்டுபிடிக்க வேண்டும் என்று சொன்னது எனக்கு நினைவிருக்கிறது.

மோட்டார் சைக்கிள் பந்தயப் பாதையில் இருந்தபோது, ஒரு மாடலிங் நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் வந்து என்னை அணுகி விசிட்டிங் கார்ட் கொடுத்தார். உனக்கு மாடலிங்கில் ஆர்வம் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள் என்றும் சொன்னார். அப்புறம் என்னை அறியாமலே நான் பிரிண்ட் விளம்பரங்கள் மற்றும் டிவி விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்தேன்” என தன் சினிமா வாழ்க்கையின் ஆரம்பம் குறித்து பேசுகிறார்.

நான் நடிப்பில் இறங்கியபோது என் பெற்றோர் கவலைப்பட்டனர். அத்தோடு நான் இருட்டில் குதிக்கிறேன் என்பது எனக்குத் தெரியும் என்றும் அவர்களிடம் சொன்னேன். ஆனால், என் இடத்தில் இருக்க விரும்பும் எல்லோரையும் நினைத்துப் பாருங்கள், ஒரு தயாரிப்பு நிறுவனம் என்னை அணுகி நான் மறுத்திருந்தால், அவர்கள் எவ்வளவு கோபப்படுவார்கள்.

அதை எல்லாம் யோசித்து தான் நான் நடிகனானேன். எனக்குக் கடன் இருக்கிறது. சில படங்கள் செய்து விட்டு கடனை அடைக்க வேண்டும் என்று ஒரு பத்திரிகையாளருக்குப் பதில் சொன்னேன். புகழ் தேடி நான் இந்தத் துறைக்கு வரவில்லை.” என்றார்.

ஆடிஷனில் தேர்ச்சி பெற்றுதான் நடிக்க வேண்டியிருந்தது. தனக்குக் கிடைத்த வேலையைத் தீவிரமாகவும், நேர்மையாகவும் செய்தேன். ஆரம்பகாலப் படங்களில் தனது ஆங்கில உச்சரிப்பிற்காக விமர்சனம் செய்யப்பட்டேந். அதனால் அதில் கவனம் செலுத்தி வந்தேன் என்றும் அஜித் கூறினார்.

நடிகர் அஜித் குமார் 1990 ஆம் ஆண்டு வெளியான தமிழ்ப் படமான ‘என் வீடு என் கணவர்’ படத்தில் என் கண்மணி எனும் பாடலில் ஒரு பள்ளி மாணவராக வருவார். இதன் மூலம் தான் அஜித் நடிப்புலகில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து அவர் தெலுங்குப் படமான ‘பிரேமா புஸ்தகம்’ எனும் படத்தில் முன்னணி வேடம் ஏற்றார். இதற்ககா அவருக்கு சிறந்த புதுமுக நடிகர் விருதும் கிடைத்தது.

இதன் பின்னர் தான் அமராவதி படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் அவர் தமிழில் கதாநாயகனாக அறிமுகமானார். அன்று தொடங்கிய பயணம் தற்போது குட் பேட் அக்லி எனும் பிளாக் பஸ்டர் வரை தொடர்கிறது.