கோவை சிட்டியில் மனப்பிறழ்வு ஏற்பட்ட ஒருவன் பார்ப்பவர்கள் அனைவரையும் அடித்து நொறுக்குகிறான். அதனை தடுப்பதற்காக இயேசுபியாக வரும் விதார்த் தலைமையில் ஒரு பெரிய படை தேடுகிறது. இறுதியில் அந்த மனநலம் பாதித்தவர் யார்..? எதற்காக இப்படி எல்லாம் செய்கிறான் என்பதை மீதிக்கதை.
லாந்தர் என்ற பெயர் வைத்து, லாந்தர் விளக்கை காட்டாமல் தெருவிளக்கிலேயே படத்தை எடுத்து வைத்திருக்கிறார்கள்.

படத்தில் விறுவிறுப்பை இன்னும் கூட்டி இருக்கலாம், காதல் காட்சிகளை இன்னும் அழகாக்கி இருக்கலாம். இறுதி காட்சியில் வரும் கார் சேசிங் சீன்.
ஒளிப்பதிவு மிக நன்றாக உள்ளது. வசனத்தில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். விதார்த் தன்னுடைய நடிப்பை மெருகேற்றி இருக்கலாம்.
ஆக மொத்தத்தில் லாந்தர் ஒரு சிம்னி விளக்கு.