
bollywood news ➔ tollywood news ➔ kollywood newsBy sivan|2024-07-15
வாழும் கலை ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஜீயின் வாழ்க்கை சம்பவம் த்ரில்லர் படமாக உருவாகிறது
வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மையமாக வைத்து சர்வதேசப் படம் உருவாகிறது.
த்ரில்லர் பாணியில் உருவாகும் இதை இந்தியில் வெளியான பதான், வார், ஃபைட்டர் படங்களை இயக்கிய சித்தார்த் ஆனந்த் இயக்குகிறார். மகாவீர் ஜெயின் தயாரிக்கிறார்.
கொலம்பியாவில் அரசுக்கும், புரட்சிகர ஆயுத முன்னணி என்ற அமைப்புக்கும் 50 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வந்தது. இந்தப் போர் அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் கடந்த சில வருடங்களுக்கு முன் முடிவுக்கு வந்தது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர், வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர். அவரின் இந்த அனுபவத்தின் அடிப்படையில் இந்தப் படம் உருவாகிறது. இதில் வெளிநாட்டு நடிகர்கள் பலர் நடிக்க இருக்கின்றனர்.
