நடிகர் சிவக்குமாரின் வாரிசாக திரையுலகில் வலம் வருபவர்கள் சூர்யா மற்றும் அவரின் தம்பி கார்த்தி. நேருக்கு நேர் படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் சூர்யா. அதேபோல் கார்த்தி பருத்தி வீரன் படம் மூலம் அறிமுகமானார். சூர்யா கங்குவா படத்தில் நடித்துவிட்டு இப்போது கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். அவரின் தம்பி கார்த்தியோ சர்தார் 2-வில் நடித்து வருகிறார். துவக்கத்தில் மற்ற தயாரிப்பாளர்களின் படங்களில் நடித்து வந்த சூர்யாவும், கார்த்தியும் ஒரு கட்டத்தில் சொந்த படங்களில் நடிக்க துவங்கினார்கள். கார்த்தி பெரும்பாலும் 2டி அல்லது ஞானவேல் ராஜாவின் ஸ்டுயோ கிரீன் நிறுவனத்தில் மட்டுமே நடிப்பார். ஏனெனில், ஞானவேல் ராஜா அவரின் நெருங்கிய உறவினர். அதேபோல்தான் கார்த்தியும். ஸ்டுடியோ கிரீன் அல்லது எஸ்.ஆர்.பிரபுவின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் ஆகியோரின் தயாரிப்பில் மட்டுமே நடிக்க துவங்கினார். சம்பளம் மற்றும் லாபத்தில் குறிப்பிட சதவீதம் என்பதுதான் டீல். இந்நிலையில், சூர்யா, கார்த்தி இருவருமே இனிமேல் 2டி, ஸ்டுடியோ கிரீன், டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனங்களில் நடிக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளனராம். அதற்கு காரணம் ஓடிடி நிறுவனங்கள் முன்புபோல் அதிக விலை கொடுத்து படங்களை வாங்குவதில்லை. என்பதுதான். இதனால் தன்னுடைய மற்றும் தங்களின் உறவினர்களின் நிறுவனங்கள் நஷ்டமடைய அவர்கள் விரும்பவில்லை என சொல்லப்படுகிறது. அதாவது மற்ற தயாரிப்பாளர்கள் நஷ்டமடையலாம். ஆனால், நாமோ, நமக்கு வேண்டியப்பட்டவர்களோ நஷ்டம் அடையக்கூடாது என்பதால்தான் இனிமேல் மற்ற தயாரிப்பாளர்களின் படங்களில் நடிக்க முடிவெடுத்திருக்கிறார்களாம்.