ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்திற்கு பல நடிகைகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்!
பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல்:
ஜம்மு காஷ்மீரின், பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த அசம்பாவித சம்பவத்தில், ஏராளமானோர் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தற்போது நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல்வாதிகள், பிரபலங்கள் என பலரும் தங்களுடைய கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் நடிகைகள் சிலர்... கண்டனம் தெரிவிக்கும் விதமாக, தங்களுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் சில பதிவுகளை போட்டுள்ளனர்.
கீர்த்தி சுரேஷ்:
பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைப் பற்றி கேட்டதும் நான் மிகவும் வருத்தமடைந்தது மட்டும் இன்றி, மிகவும் மனவேதனையடைந்தேன். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் எனது துயரத்தையும், எனது எண்ணங்களையும், பிரார்த்தனைகளையும் வெளிப்படுத்த முடியாமல் திகைத்துப் போனேன் என கூறியுள்ளார்.

தமன்னா பாட்டியா:
எந்த குற்றமும்மின்றி இழந்த அப்பாவி மக்களின் மரணம் பேரிழப்பு. இது மிகவும் கொடூரமானது. இதனால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபருக்காகவும், குடும்பங்களுக்காகவும் பிரார்த்தனை செய்து, அமைதியும் இரக்கமும் நிலவ வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன். என இன்ஸ்ட்டா ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.

ராஷ்மிகா மந்தனா:
காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் வெளிநாட்டினர் மற்றும் இரண்டு உள்ளூர்வாசிகள் அடங்குவர் என்பது என் இதயத்தைத் நொறுங்குகிறது. என்று கூறியுள்ளார்.

ஹன்சிகா:
காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடூரமான தாக்குதலால் மிகவும் வருத்தமடைந்து, பாதிக்கப்பட்ட அப்பாவிகளின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவாகவும் முழுமையாகவும் குணமடைய வாழ்த்துகிறேன். நீதி நிலைநாட்டப்பட வேண்டும், அமைதியும் பலமும் கிடைக்கட்டும் என கூறியுள்ளார்.

ராஷி கன்னா:
தீபகற்ப தாக்குதல் என்பது வாழ்க்கை எவ்வளவு பலவீனமானது, வெறுப்பு நம்மை வழிநடத்த அனுமதிக்கும்போது நாம் எப்படி மாற முடியும் என்பதற்கான ஒரு கொடூரமான எச்சமாகும். இந்த செயலை நான் கண்டிக்கிறேன்.
எந்த காரணமும், தேடல் கொடுமையை நியாயப்படுத்த முடியாது. என் இதயம் வலிக்கிறது. நாம் இன்னும் அதைத் தேர்ந்தெடுத்து அதை அர்த்தப்படுத்த தைரியம் வேண்டும் என கூறியுள்ளார்.

மாளவிகா மோகனன்:
நடிகை மாளவிகா மோகனன் போட்டுள்ள பதிவில், "இந்த வருட தொடக்கத்தில் என் குடும்பத்தினருடன் காஷ்மீருக்குச் சென்றதும், நாங்கள் ஒன்றாக எங்கள் அழகான நேரத்தை அனுபவித்து அங்கு செலவிட்ட சிறிய தருணங்களும் எனக்கு நினைவிருக்கிறது.

பஹல்காமில் என்ன நடந்தது என்ற செய்தியைக் கேட்ட தருணம் எனக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியது. இது கற்பனை செய்ய முடியாத பயங்கரமான ஒன்று. ஒரு நொடியில் முற்றிலும் திகிலூட்டும் விதத்தில் அந்த இடம் மாறிப்போனது என வேதனையோடு தெரிவித்துள்ளார்.