பிரேம்ஜி அமரன், குழந்தை நட்சத்திரம் திவ்யதர்ஷினி, ‘சூப்பர் குட்’ சுப்பிரமணி இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில் இயக்குனர் கருப்பையா முருகன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம்.
கிராமத்தில் நிம்மதியாக வாழ்க்கை வாழும் பிரேம்ஜி அமரன் தனது பெண்ணின் படிப்பிற்காக சென்னை நகரத்தை நோக்கி அடி எடுத்து வைக்கிறார். ஒரு போஸ்டர் ஒட்டும் வேலையில் செய்கிறார். ஒரு சாதாரண வீட்டில் வசித்து வருகிறார். பெண்ணை அரசு பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கிறார். அப்பொழுது எட்டாவது படிக்கும் அந்தப் பெண் திடீரென்று சிறுநீர் கழிக்கும் பாதையில் ரத்தம் வருவதாக கூறியதும் அந்தப் பெண் பருவம் அடைந்து விட்டால் என்று மருத்துவரிடம் கூட்டி செல்கிறார். ஆனால் அப்பொழுதுதான் தெரிகிறது. சிறுமி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டிருக்கிறாள் என்று இதனால் கோபம் அடைந்த பிரேம் ஜீ என்ன செய்வது..? ஏது செய்வதென்று தெரியாமல் தூக்கம் இல்லாமல் தவிக்கிறார். அந்த நிலையில் தன் பெண் வந்து இதை இப்படியே சும்மா விட்டுவிடக்கூடாது அப்பா, அவனை தேடிக் கண்டுபிடித்து கொலை செய்ய வேண்டும் என்று கூறியதுடன், அந்தக் குற்றவாளி யார் என்று இருவரும் சேர்ந்து கண்டுபிடித்து அவர்களை கொலை செய்தார்களா இல்லையா என்பது தான் படத்தின் கதை.
பிரேம்ஜி, திவ்யதர்ஷினி இருவரும் நடிப்பில் மிரட்டி இருக்கிறார்கள்.
திரைக்கதையின் வேகம் ஆமை வேகத்தை விட மிகவும் குறைவு. இப்படி இருந்தால் பார்ப்பவர்களுக்கு மிகப்பெரிய அயர்ச்சியை கொடுக்கும் என்பதை இயக்குனர் சற்று சிந்தித்து இருந்திருக்கலாம்.
படத்திற்கு தேவையில்லாத பின்னணி இசை இல்லை, தேவையில்லாத கதாபாத்திரங்கள் இல்லை.
படத்தின் ஒளிப்பதிவாளர் சென்னை நகரத்தை மிகவும் எதார்த்தமாகவும் தத்துருபமாகவும் படம்பிடித்து இருக்கிறார். வாழ்த்துக்கள்.
அழுத்தம் இல்லாத திரைக்கதை, எட்டாம் வகுப்பு பெண்ணிற்கு வயதை தாண்டிய அறிவு முதிர்ச்சி ஆகிய இரண்டும் மிகப்பெரிய லாஜிக் ஓட்டைகளாகவே பார்க்கப்படுவதால் வல்லமை படம் சற்று வலிமை குறைந்த படமாகவே தென்படுகிறது.